மலேசியாவில் பாவாடைராயன் ஆலயம்.

by - 01:25

     ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம் மலேசியாவில் உள்ள கோலா செலங்கோர் என்னும் இடத்தில் 1991ஆம் ஆண்டு, ஆறுமுகம் தர்மலிங்கம் என்பவரால் சிறிய அளவில் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு அக்கோயில் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     அதே போல், ஆண்டுக்கு ஒரு முறை, ஆடி திருவிழா, இக்கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆடி திருவிழாவின்போதும், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதமான சடங்குகளும், அப்படியே பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பால் குடம், காவடி எடுத்தல், அலகு குத்திகொல்லுதல், கிடா வெட்டுதல் போன்ற சடங்குகளும் பக்தி பரவசத்துடன் மேற்கொள்ளப்படுகிறன.

     ஆலயத்தில், பாவாடைராயன் மூலவராக அருள்பாலிக்கிறார். பாவடைராயனுக்கு எதிரே கொல்லி மலை மாசி பெரியண்ணன்சாமியின் சூலம் வைக்கப்பட்டுள்ளது, அது தான் பாவாடைராயனுக்கு காவல் தெய்வமாக இருக்கிறது.

     மலேசியாவில், பெஸ்தாரி ஜெயா, கோலா செலங்கோர் என்ற இடத்தில் ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம் அமைந்துள்ளது.

You May Also Like

0 comments