பாவாடைராயன் - கடவுள் மடியில் இடம் பிடித்த ஒரே காவல் தெய்வம் !

by - 12:05



அங்காளம்மன் மடியில் குழந்தையாக பாவாடைராயன்,
அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், சூளை, சென்னை.

காவல் தெய்வங்களிலேயே யாருக்கும் இல்லாத சிறப்பு பாவாடைராயனுக்கு மட்டுமே உண்டு. பொதுவாக, காவல் தெய்வங்கள், பரிவார மூர்த்திகள் அனைத்தும் கோயில் பிரகாரங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மட்டுமே அமைக்க பட்டிருக்கும். சில காவல் தெய்வங்களுக்கு தனியாக ஆலயங்கள் கூட இருக்கிறது. ஆனால், பாவாடைராயனுக்கு மட்டுமே அங்காளபரமேஸ்வரியின் மடியில் குழந்தையாக அமர்ந்திருக்கும் சிறப்பு உண்டு. மேலும் அங்காளபரமேஸ்வரி, தமது மகனாகவே பாவாடைராயனை ஏற்றுக்கொண்டு தமது மடியில் இடம் கொடுத்துள்ளார்.

மேலும் விவரம் அறிய .. கீழே உள்ள  பாவாடைராயானின் வரலாறு LINK'ஐ பார்க்கவும் ..

பாவாடைராயன் வரலாறு !



மேலும், பாவாடைராயான் சிவனையே சிறை வைத்ததாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது ..


பருதேசியப்பராக சிவபெருமான்,
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம்,
வல்லம் படுகை, கடலூர் மாவட்டம்.

மனைவியர் முத்துநாச்சியார் - அறியனாச்சியாருடன் பாவாடைராயன்
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம்,
வல்லம் படுகை, கடலூர் மாவட்டம்.

                   மேலும், பாவாடைராயன் வல்லம் படுகையில் ஆட்சி புரிந்துவந்தார். அப்பொழுது சிவன் பிரம்மனின் சாபத்தால் ஊர் ஊராக பரதேசி கோலத்தில் திரிந்தார். அப்பொழுது, ஈசன் வல்லம் படுகை வந்தடைந்தார். வந்திருப்பவர் சிவபெருமான் என்று அறியாமல், பாவாடைராயன், இவன் ஏதோ வேற்றுநாட்டு உளவாளியாக இருப்பான் என்று ஈசனை சிறையில் அடைத்துவிட்டார்.

மேலும் படிக்க .. கீழே உள்ள LINK'ஐ பார்க்கவும் .. 

சிவனை சிறைவைத்த பாவாடைராயன்!







You May Also Like

0 comments